‘போதைப் பொருள் பாவனை நாட்டுக்குள் அதிகரித்துள்ளது ‘

போதைப் பொருள் பாவனை நாட்டுக்குள் அதிகரித்துள்ளதாக ​பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ​போதை பாவனையே காரணமென அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்தாண்டு மாத்திரம் 737 கிலோகிராம் ஹெரோய்ன், 40,000 கிலோகிராம் கஞ்சா, 1000 கிலோகிராம் கொக்கெய்ன், ஹசீஸ் எனப்படும் போதைப்பொருள் 13 கிலோகிராம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளனவென பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts