மகிந்தவுக்கு ஆதரவு வழங்கியுள்ள வியாழேந்திரனுக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளட் அமைப்பின் உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன், நேற்று மாலை அரசாங்கத்தில் இணைந்துகொண்டு பிரதி அமைச்சராக பதவியேற்றார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  இவ்வாறு பதிலளித்தார்.

Related posts