மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி

மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது 
இக் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்க்கொண்டவர் காத்தான்குடி 6ம் பிரிவு தைக்கா வீதியைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றில்வான் என அடையாளம் காணப்பட்டதுடன் இவர் தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 2007 ம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனவும் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளவர் எனவும் கடந்த 12 திகதி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு நாடுதிரும்பிய இவர் கடந்த 16 ம் திகதி காத்தான்குடியில் வாழ்ந்து வந்த மனைவி மற்றும் 4 வயதுடைய ஒரு குழந்தையையும் காத்தான்குடியில் இருந்து கூட்டிச் சென்றுள்ளார். என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்

இவரின் மனைவியை பாணந்துறைப் பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாகவும் இவரின் மனைவியின் தாயார் தந்தையாரை காத்தான்குடியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிஜடி யினர் மேற்கொண்டு வருகின்றனர் 

Related posts