மட்டக்களப்பு நகரத்தில் உள்ள சியோன் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடித்ததில் பலர் இறப்பு

மட்டக்களப்பு நகரத்தில் உள்ள சியோன் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடித்ததில் பலர் இறப்பு.பல காயம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை 9.00 மணியளவில் ஏற்பட்ட பாரிய குண்டு வெடிப்பில் பலர் இறந்துள்ளார்கள்.பலர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றார்கள்.

கிறிஸ்தவம் மதத்தினை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தமது வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள்.இதன்போது சரியாக 9.00 மணியளவில் பாரிய வெடிச்சத்தம் ஏற்பட்டு மட்டக்களப்பு நகர மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.
குண்டு வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் பொதுமக்கள்,உறவினர்கள்,முப்படையினர்,மாவட்ட அரசாங்க அதிபர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் உதவியுடன் தீயணைத்து காயப்பட்டவர்களையும்,சடலங்களையும் மீட்டெடுத்தார்கள்.

மனித உடல்கள் பாரியளவில் தேவாவவயம் சூழவுள்ள பிரதேசங்களில் வீசப்பட்டுள்ளது.அருகாமையில் உள்ள வீடுகளின் சுவர்கள்,சவரில் உள்ள கண்ணாடிகள் சுக்குநூறாக வீசப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிள் பல தீப்பற்றிக் கருகிப்போய் காணப்பட்டது.

Related posts