மட்டக்களப்பு பஸ் சாலையின் வீதி பரிசோதகர்களின் செயற்பாட்டால் பயணி கவலை

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான  காலி – பாசிக்குடா  பஸ்ஸில் இன்று  பயணித்த பயணி ஒருவர் பெற்றுக்கொண்ட பயண சீட்டை  தொலைத்து விட்டார் .

குருக்கள்மடம் பகுதியில் வைத்து மட்டக்களப்பு  பஸ் சாலையின் வீதி பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறி பயணிகளின் பயண சீட்டை  பரிசோதித்த போது பயண சீட்டை  தொலைத்த பயணி   பரிசோதகரிடம் பயண சீட்டு எடுத்ததையும் அது தொலைந்த விடயத்தையும்  கூறியுள்ளார் . பயண சீட்டு வழங்கும் இயந்திரத்திலும் பயண சீட்டு வழங்கப்பட்டது  பதியப்பட்டுள்ளது .

ஆனால்  பரிசோதகர்கள் கேட்கவில்லை . பயணிக்கு 1340 ரூபா அபராதம் விதித்ததுடன் பற்றுசீட்டும் வழங்கவில்லை.

Related posts