மட்டக்களப்பு பிரதான வீதியில் மரம் முறிந்து குறுக்கே

மட்டக்களப்பு  பிரதான வீதியில் மரம் முறிந்து குறுக்கே வீதியில் கிடந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

மட்டக்களப்பு-வாழைச்சேனை நெடுஞ்சாலை வீதியில் பலத்த காற்றினால் பொதுமக்களின்  போக்குவரத்துக்கு  தடை ஏற்பட்டது.பலத்த காற்றினால் முறக்கொட்டான்சேனை கிராமத்தின் பிரதான வீதியில் இருந்த வேப்பைமரம்  வீதியின் குறுக்கே சாய்ந்ததால் போக்குவரத்து தடை  ஏற்பட்டது.

இன்று வியாழக்கிழமை(13)காலநிலை மாற்றத்தினால் இந்த நிலை போக்குவரத்து தடை ஏற்பட்டு மரம் வீதிக்கு குறுக்கே விழுந்து காணப்பட்டது.இதனால் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இருவர் சிறுகாயங்கள் ஏற்பட்டு சிசிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்கள்.

Related posts