மட்டக்களப்பு மண்டுர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்

மட்டுமாநகரின் மிகவும் தொன்மையும் பழமையும் வாய்ந்த மட்டக்களப்பு மண்டுர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 2018.08.06ம் திகதி இன்று திங்கள் கிழமை இரவு 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் மண்டுர் ஆலய வண்ணக்கர் கணக்கப்பிள்ளைமார் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 2018.08.26ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் தீர்த்த உற்சவம் நடைபெற்று அன்றையதினம் கொடியிறக்கத்துடன் இந்நிகழ்வு நிறைவுபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றத்தின் SPL/2577/12ம் இலக்க 2016.09.01ம் திகதிய கட்டளையின் பிரகாரம் மண்டுர் ஸ்ரீ கந்தசாமி ஆலய பொது நிருவாகம் நிதிமுறைமை மற்றும் கோயில் உற்சவம் போன்றவை பிரதேச செயலாளரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இவ் உற்சவ காலப்பகுதியில் 1999.05.27ம் திகதிய 5886 ஆம் இலக்க அரச வர்த்தமானி அறிவித்தலில்  பிரசுரிக்கப்பட்ட யாத்திரிகர் தொடர்பான விதிகள் இக்கால வேளையில் அமுலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts