மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு… முதல்வரின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் எண்மர் வெளிநடப்பு…

மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. மாநகரசபையினை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று நாளை (05) உடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் இந்நடப்பாண்டுக்கான இறுதி அமர்வாக இது நடைபெற்றது.

வழமைபோன்று சபைச் சம்பிரதாயங்களின் பிரகாரம் சபை அமர்வுகள் ஆரம்பிக்கின்ற வேளையில் முதல்வரின் பல்வேறு செயற்பாடுகளில் அதிருப்தியிருப்பதாகவும்இ கலந்துரையாடல் இல்லாமல் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் சபை அமர்வினைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் (டெலோ) சேர்ந்த மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட உறுப்பினர்கள் ஐவர்இ ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) உறுப்பினர் இருவர்இ இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் என எட்டு உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநடப்புச் செய்தனர்.

இருப்பினும்இ சபை நடவடிக்கைகள் தொடச்சியாக இடம்பெற்றன. பல்வேறு பிரேரணைகள்இ முன்மொழிவுகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.

இதன்போது சபை வெளிநடப்பு தொடர்பில் மாநகர பிரதி முதல்வர் கருத்து தெரிவிக்கையில்இ மாநகர முதல்வரின் பலவேறு செயற்பாடுகள் எமக்கு அதிருப்தி அளிப்பதுடன்இ கலந்துரையாடல் இல்லாமல் தன்னிச்சையான சில முடிவுகளை மேற்கொள்வதன் காரணமாக நாங்கள் எமது கட்சியின் மாவட்டத் தலைமைகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இன்றைய தினம் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்புச் செய்வது என்ற தீர்மானத்தினை மேற்கொண்டிருந்தோம்.

எமது இந்தத் தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும்இ இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் ஆதரவளித்து எம்முடன் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

இம்முடிவு கட்சி செயற்பாடுகளுக்கு விரோதமாக எடுக்கப்படவில்லை. எதிர்வரும் காலத்தில் எமது ஒற்றுமையினை வலுப்பெறச் செய்யவும்இ கலந்துரையாடல்கள் மூலம் முடிவெடுக்கும் செயற்பாட்டை உறுதிப்படுத்தும் முகமாகவுமே இவ் வெளிநடப்பு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் காலத்தில் இந்நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஒற்றுமையை வலுப்பெறச் செய்யும் முகமாக மாநகர முதல்வர் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts