மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினருக்கு பழையமாணவர்களினால் கிரிகெட் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் புகழ்பூத்த பாடசாலைகளான மெதடிஸ்த மத்தியகல்லூரிக்கும்,புனித மிக்கெல் கல்லூரிகளுக்கிடையிலான வருடாந்தம் நடைபெற்றுவரும் “பாடுமீன் சமர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது இவ்வருடம்(2018) ஜுன்மாதம்8,9 திகதிகளில் சிவானந்தா தேசியபாடசாலையின் விளையாட்டு மைதானத்தில்  நடைபெறவுள்ளது.

இதற்காக மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியை வலுவூட்டும் பொருட்டு வகையில் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் உள்ள கல்லூரியின்  உள்ள கல்லூரியின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் 200,000 ரூபா பெறுமதியான கிரிக்கெட்  விளையாட்டு உபகரணங்களை பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் மற்றும் பொதுச் செயலாளர் எந்திரி உ.மயூரன் ஆகியோர்கள் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் இராசதுரை-பாஸ்கர் அவர்களிடம் வெள்ளிக்கிழமை(11.5.2018) வைபரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts