மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

கொரோணா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்பட்ட நிலையில் அரசு உட்பட பல்வேறு அமைப்புகளும் மக்களுக்கான உதவிகள், உலர் உணவுப் பொருட்கள் போன்ற உதவிகளை செய்து வருகின்றன.
 
அவ்வகையில், அன்றாடம் தொழில் புரிந்து வாழ்வாதாரத்தை ஈட்டும் குடும்பங்களின் நிலைமையினைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தினால் இன்றைய தினம் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுவன்கேணி பிரதேசத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
 
இச் செயற்பாட்டில் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் தலைவர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் உட்பட ரோட்டரிக் கழகப் பிரதிநிதிகள், ஏறாவூர்ப்பற்றுப் பிராத்திய சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேச இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts