மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்கள்  மாகாண மட்டத்திலும் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் தனி மற்றும் குழு விளையாட்டுக்களில் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் அதிகஷ்ரப் பிரதேசத்தில் அமைந்துள்ள மட்.பட்.மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்கள் பல வருடங்களாக வலயமட்டத்திலும், மாகாண மட்டத்திலும் சாதனை புரிந்துவருகின்றனர்
அந்தவகையில் இவ்வருடமும் நடைபெற்ற மாகாண மட்டவிளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான எல்லே அணியினர் பட்டிருப்பு கல்வி வலய மட்டத்தில் இரண்டாமிடத்தையும், கிழக்கு மாகாணமட்டத்தில் இரண்டாமிடத்தையும் பெற்று தேசியமட்டத்திற்குத் தெரிவாகியுள்ளனர்
அந்தவகையில் வெற்றி பெற்று பெருமை சேர்த்த மாணவர்களையும், பயிற்று வித்த ஆசிரியர் பு.சிறிகாந் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாடசாலை அதிபர் துரை சபேசன், உடற்கல்வி ஆசிரியர் ரு.சித்ராஜ் ,மற்றும் ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் அனைவரையும் பாடசாலைச் சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

Related posts