மன்னாரில் இரண்டாவது நாளாகவும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

மன்னார் மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரசாங்கத்திடமிருந்து அல்லது அரசியல்வாதிகளிடமிருந்து தங்களுக்கு எந்தவிதமான சாதகமான பதிலும் இதுவரை கிடைக்காதமையினால் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அரசாங்கம் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்று, புள்ளியின் அடிப்படையில் நியமனங்களை வழங்கும் முறையை கைவிட்டு, வயதின் அடிப்படையிலும் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையிலும் நியமனங்கள் வழங்குவதை உறுதிப்படுத்தும் வரை தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே அரசாங்கம் தங்களது போரட்டங்களை தடுப்பதை விடுத்து, அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது பொறுத்தமாக இருக்கும் எனவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts