மாகாண சபைத் ​தேர்தலை நடத்த வேண்டும்’

புதிய அரசாங்கம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் அக்கறை காட்டுமாயின் புதிய அரசாங்கத்தை அமைத்தவுடன் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டுமென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் கருத்துக்கணிப்பு, நாடாளுமன்றத் தேர்தல் போன்றவைத் தொடர்பில் சமூகத்தில் பேசப்பட்டு வருகின்றது எனவே அவ்வாறான ஒன்றை நடத்தாமல் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

எனவே குறுகிய காலப்பகுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கம் முன்னெடுக்குமென தமது அமைப்பு நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts