மாணவர்களின் வரவு அதிகரிப்பு

பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் வரவு  வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், இன்று (21) மாணவர்களின் வரவில் சற்று முன்னேற்றம்  காணப்பட்டதாக, பாடசாலைகளின் அதிபர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களை கருத்திற்கொண்டு, இரண்டு கட்டங்களாக இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின. பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமான நாள் முதல், கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

இந்நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ள நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வழங்கிய தெளிவூட்டலின் அடிப்படையில், மாணவர்கள் வழமைப்போன்று பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளனர்.

Related posts