மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதயவிழா!

படங்கள் வி.ரி.சகாதேவராஜா -காரைதீவு  நிருபர்
உலகப்பிரசித்திபெற்ற தஞ்சைப் பெருங்கோயிலைக்கட்டிய மாமன்னன் இராஜஇராஜசோழனின் 1034ஆவது ஆண்டு சதயவிழா செவ்வாயன்று(5) தஞ்சாவூரில் ஆரம்பமாகியது. 
 
தஞ்சாவூரை ஆண்ட இராஜஇராஜ சோழனின் பிறந்தநாள் விழாவை சதயவிழாவாக கொண்டாடுவது வழங்கம். அதன்பிரகாரத் தஞ்சைப்பெருங்கோவிலில் 1034வது சதயவிழா ஆரம்பமாகியது.
தமிழகத்தின் புகழ்பூத்த எழுத்தாளர் கதாப்பிரசங்கி பேராசிரியர் சுகிசிவம் பிரபல கவிஞர் உடையார்கோயில் குணா உள்ளிட்ட பெரு இலக்கியவாதிகள் கலந்கொண்டனர். காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலும் கலந்துசிறப்பித்திருந்தார். 
 
அங்கு வயலின் இசைக்கச்சேரி தொடக்கம் பலவகை கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. திருமுறைப்பண்ணிசை பண்ணிசை அரங்கம் இசையரங்கம் கருத்தரங்கு ராஜரரிசோழனின் பெருமபுகழுக்கு காரணம் ஆட்சி;த்திறனா பக்திப்பணியா என்றதலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெற்றது.
 
இராஜஇராஜசோழனின் பெருமையை எடுத்தியம்பும்வண்ணம் பலரதும் பேச்சு அமைந்திருந்தது. தமிழ்ப்பணிசெய்த பலரும் பொன்னாடைபோர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதன்போதான படங்கள்இவை.

Related posts