மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவுக்கு கௌரவிப்பு.

ஜப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பின் (JKMO) அமைப்பின் விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பாடும் மீன் ஓய்வு விடுதியில், கிழக்கு மாகாண ஜே.கே.எம்.ஓ அமைப்பின் தலைவரும், பிரதான பயிறுவிப்பாளருமான சிகான். எந்திரி.எஸ்.முருகேந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் திங்கட்கிழமை(17) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றபோது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் திருமதி.கலாமதி பத்மராஜா 30வருடகாலம் இலங்கை நிருவாக சேவையை ஆற்றிவருகின்றார்.அரசாங்க அதிபரின் அரசசேவையை பாராட்டியும், சிறப்புபரிசு வழங்கியும்,பொன்னாடை போற்றியும் கௌரவிக்கப்பட்டார்.

Related posts