மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மூன்றாவது ஆண்டு சங்காபிஷேக சிறப்பு பூசை

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மூன்றாவது ஆண்டு  சங்காபிஷேக சிறப்பு பூசை இன்று நண்பகல் பிரதம குரு  சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
 
இவ் ஆலயத்தின் மகா கும்பாவிஷேக நிகழ்வானது 2017.02.03 ஆந் திகதி நடைபெற்றிருந்த நிலையில் சங்காபிஷேக நாளானது திதியின் பிரகாரம் இன்று வெள்ளிக்கிழமை  பிரதம குரு  சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வரக்குருக்கள் தலைமையில் விநாயகருக்கான அபிசேகப் பூசையும் அதனைத் தெடர்ந்து சிறப்புப் பூசையும,; அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.
 
இச் சங்காபிஷேக நிழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
????????????????????????????????????
????????????????????????????????????

Related posts