முச்சக்கரவண்டி விபத்து இருவர் படுகாயம்

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாளங்குடாவில் முச்சக்கர வண்டி மின்கம்பத்தடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் 19 ஆம்திகதி வியாழக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் மருதமுனையில் இருந்து ஏறாவூர்ப் பிரதேசத்திற்கு  முச்சக்கரவண்டியில் சென்ற இருவரே விபத்தில் காயமடைந்துள்ளனர்

 முச்சக்கரவண்டி சாரதி தனது கட்டுப்பாட்டை மீறி தாளங்குடாப் பகுதியில் மின்கம்பத்தில் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது விபத்தில் காயமடைந்த இருவரையும் அவசர அம்புலன்ஸ் வண்டிமூலம் வைத்தியாலைக்கு பொதுமக்களல் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவ் விபத்தில் மருதமுனை மற்றும் கல்லாறு பகுதிகளைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

OLYMPUS DIGITAL CAMERA

Related posts