முதுமானி மேற்பட்டப் படிப்புக்கான தேர்வுப் பரீட்சை

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி முதுமானி மேற்பட்டப் படிப்புக்கான தேர்வு, நாளை மறுதினம் (30) நடைபெறவுள்ளதாக, அப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசாரத்துக்கான பீடத்துக்கான பீடாதிபதி எம்.ரவி அறிவித்துள்ளார்.

2019-2020 ஆண்டுகளின் பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகள் அனைவருக்குமான கல்வி முதுமானி தேர்வுப் பரீட்சையே, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அன்றையதினம் காலை 9 மணிக்கு இடம்பெறது.

விண்ணப்பதாரிகள் சகலரும், காலை 9 மணிக்கு பரீட்சை மண்டபத்துக்கு சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts