முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 10ம் ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 10ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காஞ்சிரங்குடா பத்திரகாளியம்மன் ஆலயத்தில் காலைமுதல் ஆத்மசாந்தி பிரார்த்தனை பூஜைகள் இடம்பெற்றதோடு வணக்க நிகழ்வாக ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 இதில் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மற்றும் உறுப்பினர்கள் பிரதேச மக்கள் போராளிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
இங்கு பொதுச்சுடரினை மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி மற்றும் தேசத்தின் வேர்கள் அமைப்பின் முக்கியஸ்தர் அஜந்தன் ஆகியோர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு கஞ்சியும் வழங்கப்பட்டது விசேட அம்சமாகும்.

Related posts