மூன்று கோடி பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

நாட்டிற்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரிடமிருந்து 5.1 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 9 இலட்சம் ரூபா பெருமதியான தங்கத்துடன் வௌிநாட்டவர் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று (25) சென்னையிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் 150 கிராம் தங்கத்தை தனது பாதணியில் மறைத்துவைத்து கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts