மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  காயங்காடு புதுமண்டபத்தடி கன்னங்குடா பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யோகானந்தம் (38) என்பவர் தனக்குத்தானே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
 

குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றினால் கடந்த சில நாட்களாக அவரின் தாயின் வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்றய தினம் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் உறவினர்கள் தேட ஆரம்பித்ததாகவும் பின்னர் அருகில் உள்ள வாய்க்கால் பகுதியில் உள்ள மரத்தில் தனக்கு தானே கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் அவர்கள் விசாரணைகளின்  பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி தடயவியல் பொலிஸார் மற்றும் வவுணதீவு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

Related posts