மொழிப்பயிற்சிக்கான 12 நாள் பயிற்சிநெறி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது

மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள உயர்தர பரீட்சை எழுதிவிட்டு இருக்கும் இளைஞர் யுவதிகளின் மொழியறிவினை மேன்படுத்தும் நோக்கில் இலவச சிங்கள மொழிப்பயிற்சிக்கான 12 நாள் பயிற்சிநெறி நேற்று முன்தினம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது
 
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சினால் நடைமுறைப்படுத்தி வருகின்ற தேசிய மொழி வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மொழி மாணவர்களுக்கு சிங்கள மொழியும் சிங்கள மொழி மாணவர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிற்கும் முறையினை தேசிய மொழி மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நாடலாவிய ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
 
தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாந் தலைமையில் சிங்கள மொழி தொடர்பான 12 நாள் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Related posts