யானைகளின் அட்டகாசத்தால் பெரும் பாதிப்பு

திருகோணமலை கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல் ஊற்று பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடொன்றினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸாரும், பிரதேச வாசிகளும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் புதன்கிழமை (13) இரவு சம்பவித்துள்ளதாகவும் இதனால் வீட்டிலுள்ள தளபாடங்கள் மற்றும் வீட்டு உபகரணப் பொருட்களும் சேதத்திற்குள்ளாகி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த மே மாதமும் இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இரண்டு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.      யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளான வீட்டு உரிமையாளர்களுக்கு அரசினால் எந்தவிதமான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts