யானை தாக்கியதில் நாவிதன்வெளிப்பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பலி


மாடு தேடிச்சென்றவர் மீது திவுலானைக் காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை மலை 17 ஆம்திகதி காட்டுயானை தாக்கியதில் அம்பாரை நாவிதன்வெளி 15 ஆம் கிராமத்தினைச் சேர்ந்த 42 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து மேகராஜா என்பவர் சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில் மரணமடைந்த நபர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ளார். தனது மாடுகளை திவுலானைப் பகுதியில் மேய்த்துக்கொண்டிருந்த வேளை மங்களஹம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுலானை காட்டுப்பகுதியில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மங்களஹம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts