யாழ்ப்பாணம் உரும்புராய் ஐயப்பன் தேவஸ்தானத்தில் உபநயனச் சடங்கு வெள்ளி அன்று நடைபெறும்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு உத்தமகுமாரன்  ஜகதீஸ்வர குருக்கள் மற்றும் திருமதி கிருபாகஹரி தம்பதிகளின் புதல்வனான ஜகஸிவர்ஷன் சர்மாவிற்கு உபநயனச் சடங்கு எதிர்வரும் 28.02.2020 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் உரும்புராய் ஐயப்பன் தேவஸ்தானத்தில் பிரதம குரு வாசுதேவ ஜெவஸ்தாங்க குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
காலை 09.00 மணி முதல் 12.00 மணிவரையுள்ள சுப வேளையில் உபநயன பூநூல் தரித்தல் நிகழ்வு சிறப்பாக நிகழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உபநயன சடங்கில் பூசை வழிபாடுகளின் இறுதியில் அன்னதான நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதற்கமைய முதல் நாள் வியாழக் கிழமை மாலை 06.00 மணி தொடக்கம் 09.00 மணி வரை விஷேட ஹோமயாஹம், நவக்கிரஹயாகம் போன்ற கிரியைகள் இடம்பெறவுள்ளது.   

Related posts