யாழ் -கொழும்பு பேருந்து விபத்து – 4 பேர் பலி , 20 பேர் காயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நாத்தாண்டியா, ஹமில்டன் கால்வாயில் குறித்த சொகுசு பேருந்து இன்று (வியாழக்கிழமை) விபத்திற்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்தனர். அவர்களில் மூவர் பெண்களாவர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts