வயலுக்கு சென்ற விவசாயியை இழுத்துச்சென்ற முதலை : குடும்பத்தினர் அதிர்ச்சியில்

வயலுக்கு சென்ற விவசாயியை முதலை இழுத்துச்சென்றமையினால் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். இந்த துயரச்சம்பவம்  புதன்கிழமை  மாலை 5:30 மணியளவில்  மத்தியமுகாம் 4ம் கிராமம் அணைக்கட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
நாவிதன்வெளி  வீரச்சோலை கிராமத்தை சேர்ந்த சரவணமுத்து கந்தசாமி என்கின்ற (51) வயது மதிக்கத்தக்க குடும்பஸ்த்தரே பரிதாபமாக முதலை தாக்குதலில் மரணமடைந்துள்ளார்.
தனது வயற்காணியை பார்வையிட்டு  தனக்கு சொந்தமான பிறிதொரு  வயற்காணிக்கு நீர் பாய்ச்சுவதற்காக 4ம் கிராமம் அணைக்கட்டை கடப்பதற்கு முற்பட்ட வேளை துரதிர்ஷ்டமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இரண்டு மணி நேர பிரதேசவாசிகளின் தேடுதலின் பின்னர் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. மத்தியமுகாம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர்  தவராசா கலையரசன் அவர்கள் மரணமடைந்த சரவணமுத்து கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றார்.

Related posts