வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பழைய காகிதாதிகள் கொள்வனவு

மட்டக்களப்பு வழைச்சேனை கடதாசி ஆலை மீள் ஆரம்பிக்கபடவுள்ளதால் அலுவலகங்களில் சேரக்கூடிய கழிவு காகிதாதிகளை வாழைச்சேனை காகித ஆலைக்கு வினியோகித்து ஆலையின் எதிர்கால செயற்பாட்டினை விஸ்தரிக்க உதவுமாறு தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள சகல அலுவலகங்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபமும் அதனோடு இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts