வாழைச்சேனை பிரதேசத்தில் யானைத் தாக்குதலில் 33 வயது குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வாகனேரி பகுதியில் யானை தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (10) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வாகனேரி சுற்றுலாவிடுதி வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் குமார் ( 33 வயது) என்ற 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நேற்று (வியாழக்கிழமை) இரவு கால்நடைகளை பட்டியில் இட்டுவிட்டு, வாகனேரி குளத்தில் குளிக்கச் சென்றபோது குறித்த பகுதியில் வைத்து யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts