விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ய மறுத்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக விளையாட்டுக் கழகத்தினர் கவனயீர்ப்பு ஆட்பாட்டம்.

விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ய மறுத்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக விளையாட்டுக் கழகத்தினர் கவனயீர்ப்பு ஆட்பாட்டம்.

விளையாட்டு கழகத்தை பதிவு செய்ய மறுத்த பிரதேச செயலாளருக்கு எதிராக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவனயீர்ப்பு ஆட்பாட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(22) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

மண்முணை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோட்டமுனை விளையாட்டுக் கழகமானது இவ்வாண்டுக்கான பதிவை புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்து இருந்தது.இவ்வாறு விண்ணப்பித்து இருந்தும் விளையாட்டுக் கழகத்தை மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பதிவு செய்வதற்கு அனுமதிக்கவில்லை.இதனை கண்டித்தே கோட்டமுனை விளையாட்டுக் கழகத்தினர் இன்றையதினம் பிரதேச செயலாளருக்கு எதிராக ஆட்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது “எங்கள் விளையாட்டுக்கு சாவுமணி அடிக்காதே”,மனித உரிமையுடன் மதி;தவறி நடக்காதே,பதிவு செய்யாவிட்டால் நீதிமன்றம் செல்வோம்” என ஆட்பாட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டுக் கழகத்தினர் சுலோக அட்டையை தாங்கி நின்றார்கள்.

இவ்விடத்திற்கு விரைந்து வந்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் பிரதி முதல்வர் கே.சத்தியசீலன் ஆகியோர்கள் விளையாட்டு கழகத்தினரின் பிரச்சனையை கேட்டறிந்தனர்.இப்பிரச்சனை சம்பந்தமாக கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தினர் முதல்வருக்கு மகஜரையும் கையளித்துள்ளார்கள்.

Related posts