வீடுடைத்து 5 லட்சம் பணம், தங்க ஆபரணங்கள் கொள்ளை; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி மட்டிக்கழி பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 5 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா மற்றும் தங்க ஆபரணங்கள் கடந்த சனிக்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டிக்கழி கதிர்காமர் வீதியில் உள்ள குறித்த வீட்டில் சம்பவதினமான கடந்த சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியின் முன்பகுதியில் திறப்பை மறந்து வைத்து விட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் இரவு வீடு திரும்பியபோது வீட்டில் எவரும் இல்லாத போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டனர். குறித்த திறப்பால் திறந்து அலுமாரியில் இருந்த 5 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவநததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில் குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts