வீதி விபத்தை தடுக்க 100 துவிச்சக்கர வண்டிகளுக்கு டைனமோ வழங்கிவைப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள வீதி விபத்தை தடுக்கும் முகமாக மட்டு மாநகரசபை உறுப்பினரும் சமூக பொலிஸ் குழு தலைவர் ஸ்ரீபன் ராஜன் ஏற்பாட்டில் ஒலைசட் சிறிலங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் 100 மீனவர்களின் துவிச்சக்கரவண்டிக்கு டைனமே வழங்கும் நிழகழ்வு நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மட்டு மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது 
இந்த நிகழ்வில் அதிதிகளக மட்டக்களப்பு போதகர் சங்க தலைவர் கணவதிப்பிள்ளை தெய்வேந்திரன், போதகர் சங்க தலைவர் ஜீவானந்தம் நகுலாஜ் மட்டு மாநகரசபை உறுப்பினரும் சமூக பொலிஸ் குழு தலைவர் ஸ்ரீபன் ராஜன் , மற்றும் ஒலைசட் சிறிலங்கா நிறுவனத்தின் தலைவர் போதகர் நரேன் அட் கின்சன் ஆகியோர் கலந்து கொண்டனர் 
இதில் வறுமை நிலையிவுள்ள மீன்பிடி மீனவர்களின் நன்மை கருதி வழங்கப்பட்ட டைனோமேக்கள் உடன் துவிச்சக்கர வண்டிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts