வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிராமத்திற்கு கிராமம் விடமைப்புத் வேலைத்திட்டத்தின் கீழ் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுமுந்தன் வெளி கிராமத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இருபது பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டத்திற்கான வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு 12 ஆம்திகதி  பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகள்வில் பிரதம அதிதியாக முன்னாள் பிரதியமைச்சரும் பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளருமாக சோ.கணேசமூர்த்தி மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி,மட்டக்களப்பு மாவட்ட தேசிய விடமைப்பு  அதிகார சபையின் தொழிஙட்ப உத்தியோகத்தர் என்.கரிகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் என்.சசிதரன்இகிராம சேவைஉத்தியேகத்தர் திணைக்கள உத்தியோகத்தர்கள் விட்டுத்திட்ட பயனாளிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Related posts