வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள்

வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 21 ஆம் திகதி வரை ஏற்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை பாடசாலை அதிபர் ஊடாக அனுப்பி வைக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 011-2784208, 0112- 2784537, 011- 3188350 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Related posts