ஶ்ரீலசுக புதிய தீர்மானம் !

கட்சிக்கான புதிய ஏற்பாட்டாளர்களை நியமிப்பது தொடர்பில் குழுவொன்றை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, புத்தளம், கண்டி, குருநாகலை, ஆகிய மாவட்டங்களில் இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் தொடர்ந்தும் கட்சியில் உறுப்பினர்களாக நீடிப்பார்கள் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts