ஷங்கரிலா தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டார் – நிறுவமொன்றின் உரிமையாளரான இன்சான் சீலவனன்

கொழும்பிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாரி, அவிசாவளை – வெல்லம்பிட்டி வீதியிலுள்ள நிறுவமொன்றின் உரிமையாளரான இன்சான் சீலவனன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

குறித்த நிறுவனத்தின் 9 ஊழியர்கள், வௌ்ளம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்வரம் 6ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டை வெடிக்கவைத்த சந்தேகநபருக்கும் தெமட்டகொடையில் தற்கொலை குண்டை வெடிக்க வைத்த நபருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாக, நீதிமன்றத்தில் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts