ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தினால் காலடியில் மருத்துநீர் வழங்கிவைப்பு -மக்கள் நன்றிதெரிவிப்பு

(சா.நடனசபேசன்)

துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் புதுவருடத்திற்கான மருத்துநீர்  இன்று-13 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியில் இருந்து வீடு வீடுடாக மருத்துநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

;இந்த ஒழுங்கினை ஆலயத் தலைவர் கணேசமூர்த்தி மற்றும் செயலாளர்  ச.அரியானந்தம் ,பொருளாளர் தே.முகுந்தன் உட்பட ஆலய நிருவாகசபையினர் இச் செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றனர்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு வீடுகளுக்குக் காலடியில் மருத்துநீர் வழங்கிவருகின்ற ஆலய நிருவாகசபையினர்களுக்குப் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்

 
All-focus

Related posts