ஹேமசிறி, பூஜித்தவை கைதுசெய்ய உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாற, சட்டமா அதிபர் தப்புல டீ. லி​வேரா உத்தரவிட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கே, சட்டமா அதிபர்  இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts