32வருட கல்விச்சேவையாற்றிய நடராஜனுக்கு பிரியாவிடைநிகழ்வு!

32வருகாலம் ஆசிரியராக பிரதிஅதிபராக சம்மாந்துறைவலயத்தில் கல்விச்சேவையாற்றிய பொன்.நடராஜனுக்கான சேவைநலன் பாராட்டுவிழா றாணமடு இந்து மகாவித்தியாலயத்தில் நேற்று அதிபர்கே.தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.
 
விழாவில் சம்மாந்துறை வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எ.எஸ்.அஹமட்ஹியாஸ் எம்.எச்.எம்.ஜாபீர் செல்வி வி.நிதர்சினி உதவிக்க்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா முன்னாள் நாவிதன்வெளி கோட்டக்கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து உலகதரிசனநிறுவன முகாமையாளர் எஸ்.செல்வபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
மல்வத்தை விபுலாநந்தா மகாவித்தியாலயம் மற்றும் வீரமுனை இ.கி.மி.மகாவித்தியாயலம் போன்ற பாடசாலகைளில் விஞ்ஞான ஆசிரியராக பணியாற்றி இறுதி 6வருடங்கள் றாணமடு இந்து மகா வித்தியாலயத்தில் பிரதிஅதிபராகக்கடமையாற்றிய பொன்.நடராஜனின் சேவையை மெச்சி பலரும் வாழ்த்துரைவழங்கினர். பொன் நடராஜனின் துணைவியார் திருமதி வசந்தி நடராஜனும் கலந்து சிறப்பித்தார்.
 
மாணவர்களால் ஆளுயர மலர்மாலை சூட்டப்பட்டு அதிதிகளால் பொன்னாடைபோர்த்தப்பட்டு ஆசிரியர்களால் பரிசுவழங்கி கௌரவிக்கப்பட்டநடராஜன் இறுதியில் ஏற்புரை வழங்கினார்.
 

Related posts