ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழப்பு

பொலன்னறுவை பகுதியில் உள்ள தேசிய வனம் ஒன்றில் சேற்று நிலம் ஒன்றில் புதையுண்டிருந்த நிலையில் மேலும் இரண்டு யானைகளில் உடல்கள்  மீட்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு யானைகளின் உடல்கள்  மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேற்று நிலத்தை கடக்க எத்தனித்த போது சேற்றி மூழ்கி நேற்று 5 யானைகள் உயிரிழந்தன.

இதனிடையே, சேற்றில் மேலும் யானைகள் புதையுண்டுள்ளனவா என்பது குறித்து சோதனை மேற்கொள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Related posts