வடக்கு உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்று கோரி மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்றைய தினம் காலை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் கலந்து கொண்டுள்ளார்.

நான்காவது நாளாகத் தொடர்ந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அத்துரலிய ரத்ன தேரர் இதில் கலந்து கொண்டுள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த அவர்,

கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. இதில் வடக்கு பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக இருக்கிறது. அது தரமுயர்த்தப்படவில்லை. அதனை பூரணமான பிரதேச செயலகமாக தரமுயர்த்து வேண்டும் என்றுதான் கோருகிறோம்.

Related posts