கல்முனை- அன்னமலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து வண்டி மீது கல் வீச்சு தாக்குதல்

கல்முனை பகுதியில் இருந்து அன்னமலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து வண்டி மீது கல் வீச்சு தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் இச்சம்பவம் சனிக்கிழமை(27) மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளை தனியார் பேரூந்து வண்டியில் அதிகளவான மக்கள் பயணம் செய்துள்ள போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மேற்படி தாக்குதலினால் பேரூந்து வண்டியின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடாத்தியவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
மேலும் பயணத்தை இடைநிறுத்திய தாக்குதலுக்குள்ளான பேரூந்தில் இருந்து இறக்கப்பட்ட மக்கள் அநேகமானோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதை காண முடிந்தது.
சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts