கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
தம்பிலுவில் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி திருக்கோயில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு வந்தடைந்தனர். 
தேசிய  மகளிர் தினத்தை முன்னிட்டு இத்தனை தாங்கள் துக்க தினமாக அனுஷ்டிப்பதற்கு  தம்பிலுவில் மகா வித்தியாலயத்தில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனி கைகளில் பதாதைகளை ஏந்தியவாறு அக்கறைப்பற்று பொத்துவில் பிரதான வீதியூடாக  வருகைதந்து  திருக்கோயில் மணிக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட காணாமல்போன உறவினர்கள் கைகளில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை இட்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் இவர்கள் தலையில் கருத்துப்படி அணிந்தவாறு எதிர்ப்புகளை தெரிவித்திந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts