அக்கரைப்பற்று பத்திரகாளி அம்மன் ஆலயத்தால் வறியோருக்கு பொருளுதவி

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தின் 400000 ரூபாய் சொந்த நிதியில் இருந்து இப்பிரதேசத்தை சேர்ந்த வறிய மற்றும் வருமானம் குறைந்த 400 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் கடந்த தினங்களில் வழங்கி வைக்கப்பட்டன.

 
ஆலய பரிபாலன சபை விசேட கூட்டம் போட்டு இவ்விதம் இந்நிதியை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றது.
 
மனித நேய செயற்பாட்டாளர்களிடம் இருந்து நிதி மற்றும் பொருள் உதவிகளை பெற்று மக்களுக்கான நிவாரண சேவைகளை விஸ்தரிக்க உள்ளதாக இப்பரிபாலன சபையினர் தெரிவித்தார்கள்.
 
 

Related posts