சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம்

மார்ச் முதல் ஜூன் வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஆறு மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா பரவலினால் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இந்த கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts