கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி நாளை வௌியீடு

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் நாளை(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இந்த வருடத்திற்காக 8,000 இற்கும் அதிகமானவர்ளை இணைத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts