சிலாபத்தில் வீதியில் இறங்கி ஆசிரியர்கள் போராட்டம்

சிலாபம் நகரில், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவனை தண்டித்த ஆசிரியை ஒருவருக்கு, நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிலாபம் பெண்கள் பாடசாலையில் கல்வி புகட்டும் கன்னியாஸ்திரிகள் மற்றும் முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர்கள், கறுப்பு பட்டியணிந்தும், வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும்  ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டனர்.

Related posts