போதை மாத்திரைகளுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

சித்திரைப் புத்தாண்டுத் தினத்தில் ஒரு வகையான மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு, எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.முஹித் முன்னிலையில் சந்தேக நபரை நேற்று (15) ஆஜர்படுத்தியபோதே, அவர் இந்த  உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை, பவர் ஹவுஸ் வீதியைச் சேர்ந்த சந்தேக நபர் (22), சித்திரைப் புத்தாண்டுத் தினத்தில் 200போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டார்.

இச்சந்தேக நபர் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து திருகோணமலை, காக்கைதீவில் சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts