அம்பாறை மாவட்டத்தில் 11381 குடும்பங்களைச்சேர்ந்த 39421 பேர் இதுவரை வரட்ச்சியால் பாதிப்பு

வட கிழக்கு மாகாணத்தில் வரட்ச்சியான காலநிலை நீடித்து வருவதால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நெல் உற்பத்தியில் பிரதான பங்களிப்பை செலுத்தி வரும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் வரட்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் ஏ.சி.எம். றியாஸ் அவர்கள் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச்சேர்ந்த 1110 நபர்களும், உஹன பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களைச்சேர்ந்த 145 நபர்களும்,தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் 690 குடும்பங்களைச்சேர்ந்த 2570 பேரும்,பொத்துவில் பிரதேசத்தில் 195 குடும்பங்களைச்சேர்ந்த 3738 பேரும்,மஹாஓயா பிரதேசத்தில் 1574 குடும்பங்களை சேர்ந்த 5994 பேரும்,அம்பாறை பிரதேசத்தில் 96 குடும்பங்களைச்சேர்ந்த 356 பேரும், நாவிதன்வெளி பிரதேசத்தில் 2649 குடும்பங்களைச்சேர்ந்த 8329 பேரும்,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 1078குடும்பங்களைச்சேர்ந்த  3577 பேரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 62 குடும்பங்களைச்சேர்ந்த 204 பேரும், பதியத்தலாவ பிரதேசத்தில் 3168 குடும்பங்களை சேர்ந்த 11282 பேரும் ,தமன பிரதேசத்தை சேர்ந்த 531 குடும்பங்களில் 2124 நபர்களும் அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 11381 குடும்பங்களைச்சேர்ந்த 39421 பேர் இதுவரை வரட்ச்சியால் பாதிப்புற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது. 
பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடி நீரை பிரதேச செயலகங்களும்,பிரதேச சபைகளும் இணைந்து நீர்தாங்கிகள் மூலம் பெற்றுக்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இருந்த போதும் மேலதிக தேவைகளுக்கான நீரை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குளங்கள், ஆறுகள்,கிணறுகளில் நிலத்தடி நீர்   வற்றியுள்ளமையினால் பாவனைக்கான நீரின்றி அவதியுறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகள்  குடிப்பதற்கு நீரின்றி அலைவதையும் காணமுடிகின்றது. விவசாயத்திற்கான. நீர் வரத்து குறைந்துள்ள காரணத்தால் வேளான்மைகள் கருகி அழிந்து போவதால் பொருளாதாரம் நலிவுறுவதாக தெரிவித்தனர். 

Related posts